Monday, September 14, 2009

பொதுத்தேர்வு ரத்து சரியா?

நடப்பு கல்வியாண்டு மட்டும் சி.பி.எஸ்.இ., பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு கிடையாது என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண்களுக்கு பதில் கிரேடிங் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி, இனி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர், வேறு பள்ளிக்கு மாற நினைத்தாலோ, அல்லது வேறு படிப்புகளில் சேர நினைத்தாலோ அவர்களுக்கென, ஆன்-லைன் மூலம் சி.பி.எஸ்.இ., தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை வழங்கும்.



இதனால் ஏற்படும் சாதக,பாதகங்களை பார்ப்போம்.

சாதகங்கள்:
பொதுத்தேர்வு என்ற மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் கண்டிப்பாக விடுபடுவர்.இதனால் மாணவர்களின் தற்கொலைகள் குறையும் என்பது மறுப்பதற்கில்லை.


பாதகங்கள்:

1.நாம் வேலையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவேண்டும் என்றால்தான் முடிப்போம்.நாம் அப்படிதான் வளர்ந்துள்ளோம்.பிளஸ் 2 வரை பொதுத்தேர்வு இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்?.சும்மா..பேருக்குத்தான் படிப்போம்.இப்படியே போனால் மாணவர்களின் கல்வி தரம் குறையுமல்லவா?.

2.ஒரு மாணவன் 1 வகுப்பு முதல் ஓரே பள்ளில் படிப்பதாக வைத்துக்கொள்வோம்.ஆரம்ம காலங்களில் குறிப்பிட்ட மாணவர் சரியாக படிக்காமால் இருந்து 8 ம் வகுப்புக்குமேல் ஒழுங்க படிக்க ஆரமிக்கலாம் ஆனால் அந்த மாணவரை பற்றிய எண்ணம் ஆசிரியர்களுக்கு மாறமல் இருக்க வாய்ப்பு உண்டு.உதாரணத்திற்க்கு என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் 9-ம் வகுப்பு வரை ரேங்க் ன்னா-என்ன விலைன்னு கேட்பேன்?.ஆனால் பத்தாம் வகுப்பு வந்து ஒரளவு நன்றாகவே படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் வகுப்பில் 35-வது ரேங்க் மேல்தான் எடுப்பேன் காரணம் நாம் 9-வது வரை அப்படி இருந்தோம்ல்லா..?என்னை பற்றி தெரியாத ஆசிரியர் என் பேப்பரை திருத்தியதால் நான் பொது தேர்வில் பள்ளில் 3-வதாக வந்தேன்(சும்மா சுய விளம்பரம் தாங்க...).

3.மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையும்.
பொதுவாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிப்பதாக உள்ளது.நேராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதால் பொதுத்தேர்வு பற்றிய பயம்,அனுபவமின்மை காரணமாக தேர்வை ஒழுங்காக எழுதாமல் போக வாய்ப்பு உண்டு இதனால் விரும்பிய மேல் படிப்பு கிடைக்காமல் போகும்.10 ம் வகுப்பில் பொதுத்தேர்வு இருந்தால் மாணவர்கள் தாங்கள் செய்த தறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவது என்பது மாணவர்களுக்கு பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும்.

4.பிளஸ் 1 விரும்பிய குருப் கிடைக்குமா? பிளஸ் 1 சேர்க்கைக்கு முக்கிய காரணியாக பத்தாம் வகுப்பு மார்க் தேவைப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட குரூப்க்கு போட்டி அதிகமாக இருக்கும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்லை என்றால் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தெரிந்தவர்கள் மற்றும் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே விருப்பிய குருப் கிடைக்கும் நிலையுருவாகும்.மற்றவர்களின் நிலை..?.

5.கிரேடிங் முறையால் மாணவர்களிடயே ஆரோக்கியமான போட்டி இருக்காது.
கிரேடிங் முறையால் நன்றாக படிக்கிற மாணவர்களுக்கும், சுமாராக படிக்கிற மாணவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் இனி கிடைக்காது.சுமாராக படிக்கிற மாணவர்கள் தாம் சுமாராதான் படிக்கிறோம் என்று கூட அவர்களால் அறிந்து திருத்திக் கொள்ள வாய்ப்புயில்லாமல் போகிவிடும்.நாமெல்லாம் நம்முடன் நன்றாக படித்தவர்களின் மார்க் பார்த்துதானே இன்னும் நன்றாக படிக்கவேண்டும் என்று படித்தோம்!.

6.பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, மாநில கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள், எந்த வகையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்? ஒரே கிரேடிங்க்குள் ஆயிரம் மாணவர்கள் இடம்பெறுவர். எதன் அடிப்படையில் அவர்களின் ரேங்க் வெளியிடப்பட்டு சேர்க்கை நடைபெறும் என்று தெரியவில்லை.


இதை நடைமுறை படுத்துவதில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.நம் இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் உயர்ந்த நிலையிலிருக்க முக்கியக் காரணங்களில் ஒன்று நமது கல்வி முறையே.
பொதுத்தேர்வு தேவையில்லை என்பது சரியான முடிவாக தெரியவில்லை.இதை சம்மந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா.?

முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

3 comments:

க.பாலாசி said...

நல்ல அலசல் அன்பரே... பொதுத்தேர்வு ரத்து செய்வது தவறு என்பதே என்னுடைய கருத்தும்...

நல்ல பயனுள்ள இடுமை....வாழ்த்துக்கள்...

சுரேஷ்குமார் said...

வருகைக்கு நன்றி பாலாஜி.

senthil said...

நல்ல பயனுள்ள பதிவு .... வாழ்த்துக்கள்

Post a Comment